உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

    உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி, 2008-ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு எலைட் சிறப்புப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது


 


பள்ளித் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.கைகழுவுதல் குறித்து இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா பயிற்றுநர் விஜயகுமார், "கையினை முறையாக கழுவாததால் பல நோய் தொற்று ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், வாகனம் ஓட்டி வந்த பிறகும் கைகளை முறையாகக் கழுவ வேண்டும். அதோடு செல்போன், கணினி பயன்படுத்திய பிறகும் ,வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.


 


கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும். என விளக்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Popular posts
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது
Image
கொரோனா எச்சரிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி வருத்தம்
Image
நாளை காலை 5 மணி முதல் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்கும் - போக்குவரத்து துறை
Image
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:
Image
நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன்அவர்கள் முன்னிலையில் கிருமிநாசினி மருந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்கப்பட்டது
Image