நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை, டெல்லி மாநில அரசு நிராகரித்துள்ளது.
குற்றவாளியின் கருணை மனுவை டெல்லி மாநில அரசு இன்று அதிரடியாக நிராகரித்துள்ளது
தலைநகர் டெல்லியில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், ஓடும் பேருந்தில் நிகழ்ந்த இக்கொடூர சம்பவம், உலகையே உலுக்கியது.
வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணிற்கு 'நிர்பயா' எனப் பெயரிடப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தண்டனை குற்றவாளியான வினய் சர்மா தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி, கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கருணை மனுவை டெல்லி மாநில அரசு இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.